Asianet News TamilAsianet News Tamil

இனி திருமணங்களுக்கு செல்ல இ-பதிவு கிடையாது... அரசு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி தகவல்...!

தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 
 

officials explain  why marriage permission blocked in E - Registration
Author
Chennai, First Published May 17, 2021, 5:53 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு  பகுதியாக மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க கூட இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

officials explain  why marriage permission blocked in E - Registration

இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

officials explain  why marriage permission blocked in E - Registration

இ-பாஸ் நடைமுறையின் போது திருமண பத்திரிகையை ஆவணமாக சமர்ப்பிப்பதன் மூலமாக மாவட்ட விட்டு மாவட்டத்திற்கு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய அரசு இ-பாஸ் முறையை இ-பதிவாக மாற்றிய நிலையில் அதில் திருமணத்திற்கான அனுமதி இல்லாத மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

officials explain  why marriage permission blocked in E - Registration

தமிழகத்தில் திருமணத்திற்காக அதிகம் பேர் இ-பதிவு முறையில் விண்ணப்பித்து பயணித்து வருவதால், தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios