தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் TNPFC தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்..!

இந்நிலையில், சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;- சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இன்று 53 மின்சார ரயில்கள் ரத்து.. மெட்ரோ ரயில் சொன்ன குட்நியூஸ்.!

முக்கியமாக கடந்த ஆண்டு வருமானவரி அதிகமாக செலுத்திய காரணத்தினாலும், நடப்பாண்டில் மிகவும் குறைவாக செலுத்திய காரணத்தினால் வருமான வரி சரிபார்ப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்பலவாணன் ஐஏஎஸ்யிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.