Asianet News TamilAsianet News Tamil

உஷாராக இருங்கள்.. கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம்... குழந்தை ஹாஸ்பிட்டல்களுக்கு அலர்ட்..!

கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன்காரணமாக குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Corona 3rd wave can strike at any time... Director of Medical Education alert
Author
Chennai, First Published Jun 15, 2021, 1:54 PM IST

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார். 

கொரோனா 3வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு, கல்லூரி இயக்குநர் நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்திடவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படவேண்டும். குழந்தைகள் பிரிவில் 4ல் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக்கால பணிக்காக தயார்ப்படுத்திடவேண்டும். பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 

Corona 3rd wave can strike at any time... Director of Medical Education alert

கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கொரோனா 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Corona 3rd wave can strike at any time... Director of Medical Education alert

ஆகையால், மருத்துவமனை டீன்கள், இயக்குநர்கள் தயாராக இருக்கவேண்டும். கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன்காரணமாக குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios