Asianet News TamilAsianet News Tamil

விடாமல் உயிர் பலி கேட்கும் ஆன்லைன் ரம்மி.. பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(26). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி துர்கா(24). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. பார்த்திபன் நீண்ட நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. 

Auto driver commits suicide after losing money in online rummy
Author
First Published Dec 1, 2022, 7:22 AM IST

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(26). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி துர்கா(24). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. பார்த்திபன் நீண்ட நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. சம்பாதிக்கும் பணத்தையும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்று கணவர் கூறியதால் மனைவி துர்கா மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.50,000 வாங்கி கொடுத்துள்ளார். இதையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். 

இதையும் படிங்க;- காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா.! ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்டம்..?

Auto driver commits suicide after losing money in online rummy

இதனால், கடன் கழுத்தை நெரித்தது. கடன் கொடுத்தவர்களும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-   அதிகார திமிரு!பதவி மமதையில் ஒருவராக ஆட்டம் போடாதீங்க ஆளுநரே?ஆன்லைன் சூதாட்டத்தை மறைமுக ஆதரிக்கிறீர்களா?சீமான்

Auto driver commits suicide after losing money in online rummy

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது இதனை தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காததால்  அவசர சட்டம் காலாவதியானது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்? ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

Follow Us:
Download App:
  • android
  • ios