அமலுக்கு வந்தது பால் விலையேற்றம் !! தமிழக அரசு திட்டவட்டம் .. பொதுமக்கள் கடும் அவதி ..
தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது .
கடந்த 17 ம் தேதி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது . பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் உற்பத்தி விலையை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் பால் விற்பனை விலையையும் அதிகரித்துள்ளது .
பசும்பால் விலை 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாகவும் , எருமை பால் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி அளிக்கப்படவுள்ளது . அதே போல பால் விற்பனை விலையை 6 ரூபாய் உயர்த்தியுள்ளனர் .
ஆவினில் நிலம் , ஆரஞ்சு , பச்சை என மூன்று வண்ணங்களில் பாக்கெட் பால் கொடுக்கப்படும் . அதன் படி நீல நிற பாக்கெட் அரைலிட்டர் 20 ரூபாயும் , ஒரு லிட்டர் 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது .
பச்சை நிற பாக்கெட் கால் லிட்டர் 11 ரூபாயும் , அரை லிட்டர் 22.50 ரூபாயும் , ஒரு லிட்டர் 45 ரூபாயும் அதிகரித்துள்ளது .
ஆரஞ்சு பாக்கெட் அரை லிட்டர் 24.40 ரூபாயும் , ஒரு லிட்டர் 49 ரூபாயும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளது .
கடைசியாக கடந்த 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது .