தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்த முதல்வர் தற்போதைய நிலவரப்படி 180 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக கூறியுள்ளார்.

அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 25 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்திருப்பதாகவும் இன்று மேலும் ஒருவர் கொரோனவால் பலியாகி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்த முதல்வர் தற்போதைய நிலவரப்படி 180 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக கூறியுள்ளார்.

நேற்று வரை 118 பேர் குணமடைந்திருந்த நிலையில் ஒரேநாளில் 62 பேர் வீடு திரும்பியிருகின்றனர். இனி வரும் நாட்களில் நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அனைவரும் மேலும் 14 நாட்கள் தனிமை சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததாகவும் மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசு துரிதமாக செயல்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் தற்போது பாதிப்பு குறைந்து இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் மக்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 16, 2020, 3:07 PM IST