Asianet News TamilAsianet News Tamil

ஹெல்மெட் இல்லையா ?? .. இனி "1000" ரூபாய் அவுட் ... உஷார் மக்களே உஷார் !!

தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் இனி 1000 ரூபாய் அபராதம் சென்னை மாநகர காவல்துறையால் வசூலிக்கப்படும் . சுதந்திர தினமான நேற்றில் இருந்து இது நடைமுறைக்கு வந்தது .

1000 rs fine for people not wearing helmet
Author
Tamil Nadu, First Published Aug 16, 2019, 12:19 PM IST

நாடெங்கும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . தலைக்கவசம் இல்லாமல் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன . இதை தடுக்க , தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினாலும் , அதை பெரும்பாலானோர் கேட்பதாக இல்லை .

1000 rs fine for people not wearing helmet

இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துதுள்ளது . அதன்படி இனி தலைக்கவசம்  இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் 100 இல் இருந்து 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது .

சுதந்திர தினமான நேற்றில் இருந்து சென்னை மாநகர பகுதிகளில் இதை முழுமையாக அமல்படுத்தினார் .அதன்படி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு நேற்று அதிர்ச்சி காத்திருந்தது . அவர்களை மறித்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்து 1000 அபராதம் வசூலித்தனர் .

1000 rs fine for people not wearing helmet

இதுமட்டும் இல்லாது ,பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது . அவர்களும் தலைக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்படுகிறது .

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்கள் , இன்ஸுரன்ஸ் இல்லாத வாகனங்கள் என அனைத்திற்கும் அபராத தொகை ஏற்றப்பட்டுள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios