World Super Series Patmundan Inside India sindhu Out of Srikanth
உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிந்து வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த தோல்வியடைந்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டி நேற்றுத் தொடங்கியது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-11, 16-21, 21-18 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இந்த ஆட்டம், 63 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆடவர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன்னை எதிர்கொண்ட தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-13, 21-17 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
