கிரிக்கெட் வீரர் ஷமி மீது வழக்குப்பதிவு...! மனைவி கொடுத்த புகாரால் அம்பலமான குடும்ப தகராறு...!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி பல்வேறு புகார்களை வைத்தார்.
அதன்படி,ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் புகார் இருப்பதாகவும்,அவர் தொடர்ந்து பல ஆபாச சாட் செய்துள்ளதாகவும் அதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து அப்படியே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஹசின் ஜகாத்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,ஷமி குடும்பத்தினர் கூட தன்னை தாக்கியதாகவும்,ஷமி அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய முதற்பட்டதாகவும் கூறி இருந்தார்.
தற்போது ஒரு குழந்தை இருப்பதால் இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும்,கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் இனி சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் பேட்டியின் போது தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நேற்று கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல்,கற்பழிப்பு,துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில்,தன்னுடைய மனைவி கொடுத்த எந்த குற்றச்சாட்டுக்கும்,ஷமி எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்.