ராட்டெர்டாம் உலக டென்னிஸ் போட்டியில் தாமஸை வீழ்த்தி, சோங்கா 400-வது வெற்றியப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் நடைபெற்று வரும் உலக டென்னிஸ் போட்டியில் சோங்கா தனது அரையிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.
இதன்மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 400-ஆவது வெற்றியைப் பெற்றார்.
சோங்கா தனது இறுதிச் சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.
இதேபோன்று, கோபின் தனது அரையிறுதியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பியர் ஹியூஸ் தோற்கடித்தார்.
2011-இல் இதே ராட்டெர்டாம் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சோங்கா, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதே தனது இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
