This time India lost to China in the Sudhirman Cup.
சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் 2011-ஆம் வருடத்தைப் போல இந்த முறையும் சீனாவிடம் 0-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது இந்தியா.
சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற காலிறுதியில், முதலில் கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டம் நடைபெற்றது.
இதில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி இணை, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் லு காய் - ஹுவாங் யாகியாங் இணையுடன் மோதியது.
இரு இணைகளுக்கும் இடையே ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவின் லு காய் - ஹுவாங் யாகியாங் ஜோடி 16-21, 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று கர்சித்தது.
அடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை மோதினர்.
இருவருக்கும் இடையே 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு சென்லாங்க் வெற்றிப் பெற்றார்.
மூன்றாவதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிரக் சென் இணை, சீனாவின் ஃபு ஹாய்ஃபெங் - ஸாங் நான் இணையுடன் மோதியது.
இதில், 9-21, 11-21 என்ற செட் கணக்கில் அரைமணி நேரத்தில் வீழ்ந்தது இந்திய இணை.
இதனால், மொத்தம் உள்ள ஐந்து ஆட்டங்களில் சீனா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால், எஞ்சிய இரு ஆட்டங்களும் கைவிடப்பட்டன.
அதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணையும் விளையாடுவதாக இருந்தது.
சுதிர்மான் கோப்பை போட்டியின் காலிறுதியில் இந்தியா சந்திக்கும் 2-ஆவது தோல்வியாகும். முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதியிலும் சீனாவிடமே தோல்வி கண்டது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
