The worlds 4th level and the 47th level women have clashed today ...

பிரெஞ்சு ஓபனில் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சைமோனா ஹேலப்பும், 47-ஆம் நிலை வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபெங்கோவும் இன்று மோதுகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் ருமேனியாவின் சைமோனா, செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதியதில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் லத்வியாவின் ஜெலீனா, ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையுடன் மோதியதில் 7-6 (4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

பிரெஞ்சு ஓபனில் 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சைமோனா, ஜெலீனாவை வீழ்த்தும் பட்சத்தில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றுவார். அதோடு தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடிப்பார்.

அதேநேரத்தில் ஜெலீனா, வெல்லும்பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் லத்வியர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.