The reason for the withdrawal from the semi-final of the Championship match -
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இருந்து விலகியதற்கு விகாஸ் கிருஷ்ணன் கட்டாயம் காரணத்தை சொல்லியே ஆகனும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) விகாஸ்க்கு கிடுக்கிப்பிடி போட்டது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற விகாஸ் கிருஷண் 75 கிலோ எடைப் பிரிவில் தனது அரையிறுதியில் கொரியாவின் லீ டாங்யூனுடம் மோதுவதாக இருந்தது. ஆனால், போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அவரது அந்த நடவடிக்கைக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியது: “விகாஸ் சிங் உலக குத்துச்சண்டை தொடரில் நிச்சயம் பங்கேற்கப்போவதில்லை. மேலும், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இருந்து விலகியது தொடர்பான உரிய காரணத்தை, சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் அவர் விளக்க வேண்டும்.
காயம் காரணமாகவே போட்டியில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். ஆனால், அது உண்மைதானா என கண்டறிய வேண்டியுள்ளது.
விகாஸ் கிருஷண் என்னை சந்திக்க விரும்பினால், தாராளமாக சந்திக்கலாம். ஆனால், அவர் தனது செயலுக்கான விளக்கத்தை கண்டிப்பாக அளிக்க வேண்டும். அதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
