The petition filed for retired judges requested to select cricket players in the state and district level

<!--[if gte mso 9]> <o:AllowPNG/> <![endif]-->

<!--[if gte mso 9]>Normal0 <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> falsefalsefalse <w:DoNotPromoteQF/> EN-INX-NONEX-NONE <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:EnableOpenTypeKerning/> <w:DontFlipMirrorIndents/> <w:OverrideTableStyleHps/> <m:dispDef/> <![endif]--><!--[if gte mso 9]><![endif]--><!--[if gte mso 10]><![endif]--><span >ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.</span></p><p class="MsoNormal"><span >திண்டுக்கல் மாவட்டம் வி.டி.பட்டியைச் சேர்ந்த மாணவர் டி.தினேஷ் சார்பில் அவரது தந்தை என்.தனிக்கொடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.</span></p><div type="dfp" position=2>Ad2</div><p class="MsoNormal"><span >அதில், &ldquo;தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 14, 16, 19 மற்றும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. </span></p><p class="MsoNormal"><span >அந்தந்த வயதிற்கு உட்பட்டோருக்கான பல்வேறு கட்ட போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்தி, அதில் இருந்து தகுதியான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.</span></p><p class="MsoNormal"><span >இப்போட்டியில் பங்கெடுக்கும் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனின் அடிப்படையில் தேர்வு நடைபெற வேண்டும் என்பது விதி. ஆனால், மாவட்டத் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் தகுதியான மாணவர்களை விட தங்களுக்கு வேண்டியவர்களையே தேர்வு செய்கின்றனர். </span></p><div type="dfp" position=3>Ad3</div><p class="MsoNormal"><span >மாநில அளவில் தேர்வாகும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். இதனால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு முழுத் திறமையுடன் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.</span></p><p class="MsoNormal"><span >இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 2016 &ndash; 2017-ஆம் ஆண்டுக்கான 16 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அணித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், </span></p><p class="MsoNormal"><span >இனிவரும் காலங்களில் மாவட்ட, மாநில தேர்வுக்குழு நிர்வாகிகளுக்கு பதிலாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கிரிக்கெட் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அவர்கள் வழங்கும் விதிமுறைகள்படி வீரர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்&rdquo; என்று குறிப்பிட்டிருந்தார்.</span></p><div type="dfp" position=4>Ad4</div><p class="MsoNormal"><span >இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. </span></p><p class="MsoNormal"><span >மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.</span></p><p>&nbsp;</p>