Asianet News TamilAsianet News Tamil

நேபாளத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி…

the indian-team-has-advanced-to-the-final-beating-nepal
Author
First Published Jan 3, 2017, 11:52 AM IST


சிலிகுரி,

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது.

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் கமலாதேவி 45-வது நிமிடத்திலும், இந்துமதி 58-வது நிமிடத்திலும், சஸ்மிதா மாலிக் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

நேபாள அணி சார்பில் சபித்ரா பண்டாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios