The fifth time the gold medal was won by Indias gold medal ...

சர்வதேச அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று ஐந்தாவது முறையாக சர்வதேச அளவில் தங்கம் வென்றார் என்ற பெருமையைப் பெற்றார் திருச்சி வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ சாத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுலோவாகியா நாட்டில் உள்ள ருசம்பர்க் நகரில், சர்வதேச அளவிலான 17-ஆவது மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டிகள் மே 28 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தியா சார்பில் தமிழக வீராங்கனையான, திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த கே.ஜெனித்தா ஆண்டோ உள்ளிட்ட நால்வர் கலந்து கொண்டனர்.

மொத்தம் ஒன்பதுச் சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் ஜெனித்தா தங்கம் வென்று சர்வதேச அளவில் 5-வது முறையாக தங்கம் வென்றார் என்ற பெருமையப் பெற்றார்.

இந்த நிலையில், நேற்று தாயகம் திரும்பிய ஜெனித்தா ஆண்டோவுக்கு திருச்சி விமான நிலையத்தில், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு, சதுரங்க சங்கம், மாவட்ட விளையாட்டு ஊக்குவிப்போர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெற்றிக் குறித்து ஜெனித்தா கூறியது, "தொடர்ந்து 5-வது முறையாக சர்வதேச அளவில் தங்கம் வென்றுள்ளதால், அர்ஜுனா விருதுக்கு இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது' என்றுத் தெரிவித்தார்.