ஆத்தா.. பாஸ் ஆயிட்டேன்..! மீண்டும் வருகிறார் சுரேஷ் ரெய்னா..!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான யோ-யோ என்ற உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா தேர்வாகிவிட்டார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும் சிறந்த ஃபீல்டராகவும் வலம்வந்த சுரேஷ் ரெய்னா, இடையில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். மேலும், இந்திய அணியில் இடம்பெறுவதற்காக யோ-யோ என்ற உடற்தகுதி தேர்வில் போதிய பாயிண்ட்ஸ் பெறாததால் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
யோ-யோ டெஸ்டில் 19.5 பாயிண்ட்ஸ் பெற வேண்டும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் 16 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. அதனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது யோ-யோ டெஸ்டில் சுரேஷ் ரெய்னா தேர்வாகிவிட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்தார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Cleared my Yo-Yo & fitness test today, after days of hard work at <a href="https://twitter.com/hashtag/NCA?src=hash&ref_src=twsrc%5Etfw">#NCA</a>!<br><br>Received tremendous support from all the trainers, coaches & officials.<br>Thank you all! 👍<br><br>It’s always so encouraging to train here at <a href="https://twitter.com/hashtag/NCA?src=hash&ref_src=twsrc%5Etfw">#NCA</a>, motivates me to push my limits and bring the best out of me. 💪 <a href="https://t.co/E0Rr00NR4m">pic.twitter.com/E0Rr00NR4m</a></p>— Suresh Raina (@ImRaina) <a href="https://twitter.com/ImRaina/status/943698497043181569?ref_src=twsrc%5Etfw">December 21, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதையடுத்து இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.