Super Series Badminton Progress for Indias Kashyap Main Round ...


சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க சுற்றில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் சீன தைபேவின் கான் சாவ் யுவ் மோதினர். இதில், 21-12, 21-10 என்ற செட் கணக்கில் சாவ் யுவை வீழ்த்தினார் காஷ்யப்.

அதனைத் தொடர்ந்து, காங் காங் வீரர் லீ செக் யூவை எதிர்கொண்ட காஷ்யப், அவரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதானச் சுற்றுக்கு முன்னேறினார்.

பிரதானச் சுற்றில் தென் கொரிய வீரர் லீ டாங் குன்னை அவர் எதிர்கொள்கிறார் காஷ்யப்.

ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் - ராமச்சந்திரன் ஸ்லோக் இணை 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ - சீங் ஜா சீ இணையிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை 18-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹஃபீஸ் ஃபைஸல் - குளோரியா எமானுவேல் வித்ஜஜா இணையிடம் தோற்று வெளியேறினர்.