St Petersburg Open India Leander Paes - Purav Raja advances to the quarter-finals ...
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேறியது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி - அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி இணையுடன் மோதியது.
இதில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஃபாபியோ ஃபாக்னினி - ஜேம்ஸ் செரட்டானி இணையைத் தோற்கடித்தது பயாஸ் - பூரவ் இணை.
பயஸ் – பூரவ் இணை தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமாலினர் இணையுடம் மோதுகிறது.
