srilanka first batting in third one day match
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
கடந்த இரண்டு முறையும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இந்த முறை டாஸ் வென்றார். டாஸ் வென்ற ரோஹித், முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களான குணதிலகாவும் தரங்காவும் ஆடிவருகின்றனர். 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி 19 ரன்கள் எடுத்துள்ளது.
