rohith sharma slams fifty

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடந்துவருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ஆடினர். 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சவுதியின் பந்துவீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 52வது பந்தில் அரைசதம் அடித்து, ஒருநாள் போட்டியில் தனது 35வது அரைசதத்தை பதிவு செய்தார். 

இந்திய அணி, 17 ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவும் கோலியும் நிதானமாக ஆடி வருகின்றனர்.