மாஸ்டர்ஸ் டென்னிஸின் இறுதிச்சுற்றுக்கு ரோஜர், அலெக்சாண்டர் முன்னேற்றம்…
மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி மோதினர்.
இதில், 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் ராபின் ஹேஸியைத் தோற்கடித்தார் ஃபெட்ரர்.
இதன்மூலம் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 6-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் வீரர் ரோஜர் ஃபெடரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர், கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவுடன் மோதி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.
இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரும், அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதுகின்றனர்.