உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு முதல் தங்கம்..!
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 30 வயது இந்திய வீராங்கனை, ரஹி சர்னோபாத் 25 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்.
குரோஷியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரஹி சர்னோபாத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இறுதிச்சுற்றில் சர்னோபாத் 39 புள்ளிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் வீராங்கனை மதில்தே லமோலே, 31 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7வது இடத்திற்கு பின்தங்கி ஏமாற்றமளித்தார்.
முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், ரஹி சர்னோபாத்தின் மூலம் முதல் தங்கம் கிடைத்தது.