ஐஎஸ்எல் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் புனே நகரில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை எதிர்த்து புனே அணி ஆடியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே புனே அணிக்கு நெருக்குதல் கொடுத்தது. இருப்பினும் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை புனே அணியின் வீரர்கள் தடுத்தனர்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 79-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியின் வீரர் ஆல்பஃரோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல்கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி புனேவை வென்றது.

இதன்மூலம் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.