புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தியது குஜராத்…
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 111-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 29-23 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 111-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சந்திரன் ரஞ்சித் இரண்டு புள்ளிகளைக் கைப்பற்ற, 3-வது நிமிடத்தில் 3-0 என முன்னிலைப் பெற்றது குஜராத்.
அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரும் அபாரமாக விளையாடியதால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 25-வது நிமிடத்தில் குஜராத் 15-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மீண்டும் அபாரமாக ஆடி 29-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் 16-16 செய்தது ஜெய்ப்பூர்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் 4 புள்ளிகளைப் பெற்ற குஜராத் 20-16 என்ற முன்னிலையை பெற்றது. இதன்பிறகு இரண்டு சூப்பர் டேக்கிள் மூலம் 4 புள்ளிகளைப் பெற்ற ஜெய்ப்பூர், 35-வது நிமிடத்தில் 20-21 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
ஜெய்ப்பூர் அணி 37-வது நிமிடத்தில் ஆல் ஔட்டாக குஜராத் 29-23 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 12-வது வெற்றியைப் பெற்று, 72 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூர் அணி 16 ஆட்டங்களில் விளையாடி 7-வது தோல்வியை பெற்று 45 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது.