புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டிகளில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி யு மும்பா அணியும், ஹரியானா  ஸ்டீலர்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் வெற்றி பெற்றன. 

புரோ கபடி லீக் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.

பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் கபடி போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெறாத தமிழ் தலைவாஸ் அணி இன்று யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் 39-32 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி யு மும்பா அணி ஜெயித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிப்பு.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. தொடக்கத்திலிருந்தே ஜெய்ப்பூர் அணி தான் ஆதிக்கம் செலுத்தி ஆடியது. ஹரியானா அணி புள்ளிகளை பெற்றாலும், ஆட்டத்தின் எந்த சூழலிலும் அந்த அணியை ஆதிக்கம் செலுத்தவிடாமல் அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 44-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும்..? இந்திய வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை

இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டபாங் டெல்லி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று ஹரியானாவை வீழ்த்தி பெற்ற வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்தில் உள்ளது. 3ம் இடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி உள்ளது. இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாத தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது.