Maria Sharapova quits Wimbledon tennis tournament

ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விம்பிள்டன் போட்டியில் களமிறங்க காத்திருந்த ஷரபோவாவுக்கு காயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மரியா ஷரபோவா வெளியிட்டுள்ள அறிக்கை:

"ரோம் மாஸ்டர்ஸ் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குறித்து மேலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசை நார் முறிவு முழுமையாகக் குணமடையாதது தெரியவந்தது. அதனால் துரதிருஷ்டவசமாக விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஜூலை 31-ல் நடைபெறவுள்ள ஸ்டான்போர்டு போட்டியில் களமிறங்குவேன்' என தெரிவித்துள்ளார்.

ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் 15 மாத தடைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டென்னிஸ்க்கு திரும்பிய ஷரபோவாவுக்கு விம்பிள்டன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு கொடுக்கவில்லை. அதனால் அதில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.