Indian player defeated the worlds and Olympic champion

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை வீழ்த்தினார் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரணாய், நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் மோதினார்.

இதில், 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சென் லாங்கை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் பிரணாய், அடுத்ததாக ஜப்பானின் கஜுமாஸா சகாயை சந்திக்கிறார்.

முன்னதாக கஜுமாஸா தனது காலிறுதியில், இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்புடன் மோதியதில் 13-21, 21-16, 21-10 என்ற செட் கணக்கில் அவுசெப்பை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்ரீகாந்த், சீன தைபேவின் ஜூ வெய் வாங்குடன் மோதி 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.