Indian player defeated the worlds and Olympic champion

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை வீழ்த்தினார் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரணாய், நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் மோதினார்.

இதில், 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சென் லாங்கை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் பிரணாய், அடுத்ததாக ஜப்பானின் கஜுமாஸா சகாயை சந்திக்கிறார்.

முன்னதாக கஜுமாஸா தனது காலிறுதியில், இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்புடன் மோதியதில் 13-21, 21-16, 21-10 என்ற செட் கணக்கில் அவுசெப்பை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்ரீகாந்த், சீன தைபேவின் ஜூ வெய் வாங்குடன் மோதி 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.