Indian pair win over pair in tennis match
எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டியின் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை,. அர்ஜெண்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி போர்ச்சுகலின் எஸ்டோரில் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையுடன் மோதினர்.
இதில், 7-6 (1), 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை, அர்ஜெண்டீனா இணையை வீழ்த்தியது.
பயஸ் - ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதியில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ - கார்ஸியா லோபஸ் இணையுடன் மோதுகின்றனர்.
இதேபோல் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை தங்களின் முந்தைய சுற்றில் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமோலினர் இணையை எதிர்கொண்டது.
இதில், 6-0, 7-6 (4) என்ற நேர் செட்களில் நியூசிலாந்து இணையை இந்திய அணி தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
திவிஜ் - பூரவ் இணை தங்களின் காலிறுதியில் உருகுவேயின் ஆரில் பெஹார் - பெலாரஸின் அலெக்சாண்டர் இணையுடன் மோதுகிறது.
