இந்தியா கடந்த முறை அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்று ஆவலுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பார்க்கின்றனர் இந்திய மக்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 5 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்.

பாண்டியா, கருண் நாயர் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. அதேபோல், ராஜ்கோட் மைதானத்தில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இதுதவிர, இந்தியாவில் நடத்தப்படும் டெஸ்ட் தொடர்களிலேயே முதல் முறையாக, இந்தத் தொடரில் "டிஆர்எஸ்' எனப்படும், நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012, 2014-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.