இந்தியா ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றில் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார். 

இந்தியா ஓபன் பேட்மிண்டன் இன்று(ஜனவரி 17) தொடங்கியது. வரும் 22ம் தேதி வரை இந்த பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேடதாங்கை எதிர்கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து 12-21 மற்றும் 20-22 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் வெற்றிக்காக எவ்வளவோ கடுமையாக பி.வி.சிந்து போராடியும் பி.வி.சிந்துவால் முடியவில்லை. 

IND vs NZ: இஷான் கிஷனுக்கு புதிய பேட்டிங் ஆர்டர்.. உறுதிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்துள்ள பி.வி.சிந்து, இந்திய ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய செய்துள்ளது. 

Ranji Trophy: மற்றுமொரு அபாரமான சதம்.. இந்திய அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் சர்ஃபராஸ் கான்

டென்மார்க் வீராங்கனை மியாவை எதிர்கொண்ட இந்தியாவின் சீனியர் வீராங்கனை சாய்னா நேவால், அபாரமாக விளையாடி 21-17, 12-21 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.