தோகா,
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டியில், இந்தியாவை சேர்ந்த அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பெங்களூரு எப்.சி. (இந்தியா), ஈராக் அல் குவா அல் ஜாவியா கிளப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எப்.சி. அணி, அல் குவா அல் ஜாவியா (ஈராக் விமானப்படை) கிளப் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணி 11 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி, 2 டிராவுடன் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
ஈராக் கிளப் அணி 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
