ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அணியின் வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சென்னை அணியின் கேப்டன் தோனியை, புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து கேப்டனாக ஒப்பந்தம் செய்தது. ஆனால் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக தோல்வியடைந்தது.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றது.

இதனால் புனே அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வரும் ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.