காமன்வெல்த் போட்டி.. பளுதூக்குதலில் தங்கம் வென்று அசத்திய அச்சிந்தா ஷூலி..!
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை 3 தங்கம் வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அச்சிந்தா ஷூலி பங்கேற்றார். இதில், இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.