Carolina progress to the next round

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி கரோலினா பிஸ்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெய்ன் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், கரோலினா பிஸ்கோவா மற்றும் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர். 

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தினார் கரோலினா. இதையடுத்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கரோலினா.

மற்றொரு முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் இரினா காமேலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

அதேபோன்று, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அஸ்லீக் பார்ட்டியை போராடி வென்றார். 

மற்றொரு ஆட்டத்தில் கிக்கி பெர்டென்ஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அனசிஜா செவஸ்டோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் பிரிவில் முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வென்றார்.