டோக்கியோவில் நடந்து வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் பைனல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ராணிகிரெட்டி மற்றும் சிராஜ் ஷெட்டி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

டோக்கியோவில் நடந்து வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் பைனல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ராணிகிரெட்டி மற்றும் சிராஜ் ஷெட்டி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

இதுவரை உலக பாட்மிண்டன் வேர்ல்ட் பைனல்ஸ் போட்டியில் எந்த இந்திய ஜோடியும் பதக்கம் வென்றது கிடையாது. முதல் முறையாக சிராக், சத்விக் ஜோடி பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

Scroll to load tweet…

இன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூ வி ஜோடியை எதிர்த்து இந்திய வீரர்கள் சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் மலேசிய ஜோடியிடம், 22-20, 18-21, 16-21 ஆகிய செட்களில் போராடி இந்திய வீரர்கள் ஆரோன், சோ வூ ஜோடி தோற்றனர். 

Scroll to load tweet…

முதல் செட்டை இந்திய ஜோடி வென்றநிலையில், 2வது செட்டை போராடி கோட்டை விட்டனர். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டிலும் இந்திய ஜோடி கடுமையாகப் போராடியபோதிலும் மலேசிய ஜோடி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்