Asianet News TamilAsianet News Tamil

பெங்கால் வாரியர்ஸை புரட்டி எடுத்த புணேரி பால்டான்; பெங்கால் அணி இரண்டு முறை ஆல் அவுட்டானது…

bengal warriors defeated by puneri palton
bengal warriors defeated by puneri palton
Author
First Published Aug 16, 2017, 8:59 AM IST


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 28-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸை இரண்டு முறை ஆல் அவுட்டாக்கி புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது..

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 28-வது ஆட்டம் அகமதாபாதில் நேற்றூ நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. முதல் பத்து நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் இருந்தன.

புணேரி பால்டான் வீரர் ஜிபி மோர் ரைடின் மூலம் தனது 4-வது புள்ளியைப் பெற, அந்த அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு அசத்தலாக ஆடிய புணேரி பால்டான், 15-வது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் புணேரி பால்டான் 12-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் 18-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெங்கால் வாரியர்ஸ், சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் புணேரி பால்டான் 17-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் புணேரி பால்டன் 25-வது 20-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பிறகு 2-வது முறையாக பெங்கால் வாரியர்ஸ் ஆல் அவுட்டாக, புணேரி பால்டான் 24-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பெங்கால் அணியின் முன்னணி ரைடரான குன் லீ 26-ஆவது நிமிடத்தில்தான் ரைடின் மூலம் முதல் புள்ளியைப் பெற்றார். அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதியில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios