BCCI wants to raise salaries for players

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவிடம் , கேப்டன் விராட் கோலி வலியுறுத்த இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அடுத்தாண்டு 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக ஸ்டார் நெட்வொர்க் உடன் பிசிசிஐ ஓர் ஒப்பந்தம் இயற்றியுள்ளது. அதன்மூலம், பிசிசிஐ அதிக வருவாய் ஈட்டுமாம்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

என்வே, பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து, வீரர்களின் ஊதிய உயர்வு குறித்து வலியுறுத்த இருக்கிறாராம் வீராட் கோலி.

முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் வினோத் ராயைச் சந்தித்து வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோலி கோரிக்கை முன்வைக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.