ஐதராபாத் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் அதிவேகமாக 250 விக்கெட்டுகளை (45 டெஸ்ட்) வீழ்த்தியவர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டி முடிந்து இந்தியா வெற்றியைத் தொடர்ந்து, வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமிடம் சென்றார் அஸ்வின்.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தில் முஷ்பிகுர் ரஹிமின் ஆட்டோகிராபை வாங்கினார் அஸ்வின். இதனைக் கண்டு மற்ற வீரர்கள் ஆச்சரியத்தில் திகைத்தனர்.
இதுகுறித்து ரஹிம் கூறுகையில், "இந்த டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துடன் என்னை சந்தித்த அஸ்வின், அதில் ஆட்டோகிராப் கேட்டார்.
நான் அவருடைய 250-ஆவது விக்கெட். என்னை வீழ்த்தியதன் மூலம் அவர் டென்னிஸ் லில்லியின் உலக சாதனையை முறியடித்துவிட்டதாக கேள்விப்பட்டேன்' என்றார்.
