ATP Challenger Yuki Pompri who hugged the second round
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் நெடோவ்யேசோவை எதிர்கொண்டார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.
இதன் முதல் செட்டில் யூகி 3-0 என முன்னிலையில் இருந்தபோது இடுப்பு வலி காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அலெக்ஸாண்டர் அறிவித்தார்.
இதனையடுத்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார் யூகி பாம்ப்ரி. அடுத்த சுற்றில் போலாந்தின் கமில் மஜ்ஷர்ஸாக்கை எதிர்கொள்கிறார்.
இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி - திவிஜ் சரண் இணை, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அர்ஜென்டீனாவின் கில்லெர்மோ டுரான் - ஆன்ட்ரெஸ் மோல்டேனி இணையை வீழ்த்தியது.
இதனையடுத்து யூகி - திவிஜ் இணை தனது 2-வது சுற்றில் உக்ரைனின் டெனிஸ் மோல்சானோவ் - மோனாகோவின் ரோமெய்ன் அர்னியோடோ இணையை எதிர்கொள்கிறது.
