Asian teams beat Hong Kong in the Badminton Championship

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வென்றது.

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மலேசியாவில் நடைபெறுகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற செட்களில் யிப் புய் யின்னை வீழ்த்தி அசத்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி - சிந்து இணை 21-15, 15-21, 21-14 என்ற செட்களில் டிஸ் யாவ் - யுவென் சின் யிங் இணையை வீழ்த்தி வெற்றிக் கண்டது.

மகளிர் இரட்டையர் பிரிவு மற்றொரு ஆட்டத்தில் விங் யங் - யுவெங் கா இணை 22-20, 20-22, 10-21 என்ற செட்களில் அஸ்வினி பொன்னப்பா - பிரஜக்தா சாவந்த் இணையை வென்றது.

மகளிர் ஒற்றையர் மற்றொரு ஆட்டத்தில் செயுங் யிங் மெய் 19-21, 21-18, 20-22 என்ற செட்களில் ஸ்ரீகிருஷ்ணப் பிரியா குதரவள்ளியை தோற்கடித்தார்.

மூன்றாவது மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ருத்விகா ஷிவானி கட்டே 16-21, 21-16, 21-13 என்ற செட்களில் யெங் சம் யீயை வென்றார்.

அதன்படி, ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வென்றுள்ளது.

இந்தியா, நாளை தனது அடுத்த ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது. அந்த அணியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை அகான யமாகுசி, நடப்பு உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.