ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தயம்: இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் வெண்கலம் வென்றார்...
ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தயத்தில், மகளிருக்கான 8 கி.மீ. போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தய, சீனாவில் நடைபெறுகிறது. இதில், மகளிருக்கான 8 கி.மீ. போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதில், பந்தய இலக்கை அவர் 28.19 நிமிடங்களில் கடந்து 3-வது இடம் பிடித்தார். இப்பிரிவில் சீனாவின் லி டான் 28. 3 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கமும், ஜப்பானின் அபே யுகாரி 28.6 நீமிடங்களில் வந்து வெள்ளியும் வென்றனர்.
இந்தப் பிரிவில் போட்டியிட்ட இதர இந்தியர்களான ஸ்வாதி கதாவே 30.18 நிமிடத்தில் இலக்கை எட்டி 11-வது இடமும், ஜுமா காட்டுன் 32.14 நிமிடங்களில் இலக்கை எட்டி 140வது இடமும் பிடித்தனர். மற்றொரு இந்தியரான லலிதா பாபர் 32.53 நிமிடங்கள் என்று கடைசியாக வந்தார்.
மகளிருக்கான அணிகள் பிரிவில் போட்டியிட்ட இதே வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, அதிலும் வெண்கலப் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.