மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் யுபி வாரியர்ஸுக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குஜராத் ஜெயிண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகளும் வெற்றிகளை பெற்றுள்ளன.
ஆனால் இதுவரைஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஒரே அணி ஆர்சிபி தான். எனவே முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று யுபி வாரியர்ஸை எதிர்கொள்ளும் ஆர்சிபி அணி, இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
ஆர்சிபி அணி:
ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, சஹானா பவார், கோமல் ஜான்ஸத், ரேணுகா சிங்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிர், டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
