Asianet News TamilAsianet News Tamil

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எந்த அணி முதலில் டாஸ் ஜெயிக்கிறதோ அந்த அணி பேட்டிங் முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

What should India do to win the T20 World Cup final against South Africa at Barbados? rsk
Author
First Published Jun 29, 2024, 2:29 PM IST

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தொடரை நடத்திய அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. கடைசியாக தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு வந்தன.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கூட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்தியா 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் அதிகபட்சமாக ஹாரி ஃப்ரூக் 25 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 23 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பார்படோஸில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரீபியனில் பருவமழைக் காலம் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும், நாளையும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை முன்னறிவித்துள்ளது. மேலும், இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்று எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரு அணிகளும் விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை வந்துள்ளன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 டி20 போட்டிகளில் இந்தியா 14 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்று வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுவரையில் பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற 50 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்கள் மட்டுமே ஆகும். அதோடு சராசரி 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 125 ரன்கள் மட்டுமே ஆகும்.

மேலும், அதிகபட்ச ஸ்கோர் 224/5 ஆகும். குறைந்தபட்ச ஸ்கோர் 43/10 ஆகும். சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 172/6 ரன்கள் ஆகும். அதோடு 106/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணியும் உண்டு. பார்படோஸில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 181/8 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக வெற்றிகளை குவித்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios