Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை எதிர்கொள்ள கோலி - அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி

இந்தியாவில் கொரோனா 2ம் அலையை எதிர்கொள்ள விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி ரூ.2 கோடியை நிதியுதவி செய்துள்ளனர்.
 

virat kohli anushka sharma campaign to raising funds for covid relief work
Author
Mumbai, First Published May 7, 2021, 2:55 PM IST

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உட்பட இந்திய வீரர்கள் சிலரும் கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்தனர்.

virat kohli anushka sharma campaign to raising funds for covid relief work

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி, கொரோனாவிற்கு நிதியுதவி செய்ய நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட நிலையில், இதுவரை திரட்டிய ரூ.2 கோடியை வழங்கியுள்ளனர்.

ஐபிஎல் ரத்தானதால் மும்பையில் உள்ள வீட்டிற்கு திரும்பிய விராட் கோலி, ஓய்வெடுக்காமல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா முதல் அலையின் போது கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி ரூ.3 கோடியை நிதியுதவி செய்த நிலையில், 2ம் அலை காலத்தில் ரூ.7 கோடி நிதி திரட்ட இலக்கு வைத்து, அதில் ரூ.2 கோடியை திரட்டி கொடுத்திருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios