Asianet News TamilAsianet News Tamil

பவுலர்கள் அபாரம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி பேட்டிங்.. எதிரணியை பார்சல் செய்து தமிழ்நாடு அபார வெற்றி

சையத் முஷ்டாக் அலி தொடரில் திரிபுரா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 
 

tamil nadu beat tripura in syed mushtaq ali trophy
Author
India, First Published Nov 15, 2019, 5:54 PM IST

முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஐந்தாவது போட்டியில் திரிபுராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திரிபுரா அணியின் முதல் 7 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கே வீழ்த்திவிட்டனர் தமிழ்நாடு பவுலர்கள். 

முதல் 7 வீரர்களில் ஐந்து வீரர்கள் டக் அவுட். 5.1 ஓவருக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட திரிபுரா அணியின் 8 மற்றும் 9ம் வரிசை பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து எஞ்சிய 15 ஓவர்களையும் ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 79 ரன்கள் அடித்தது. தமிழ்நாடு அணியின் சார்பில் ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

tamil nadu beat tripura in syed mushtaq ali trophy

வெறும் 80 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக பாபா அபரஜித்தும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட்டிங் ஆடினார். மறுமுனையில் அபரஜித் நிதானமாக ஆடினர். சுந்தர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசி, வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த முருகன் அஷ்வின் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios