Asianet News TamilAsianet News Tamil

விலகிய ஆஸி., ஆல்ரவுண்டருக்கு உடனே மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ்.! விலைபோகாத இங்கி., அதிரடி வீரருக்கு சான்ஸ்

ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

sunrisers hyderabad announces jason roy as replacement for mitchell marsh who pulled out of ipl 2021
Author
Chennai, First Published Mar 31, 2021, 8:54 PM IST

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதையொட்டி, அனைத்து அணிகளும் அதற்கான தீவிர தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஆஸி., ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகினார். ஐபிஎல்லில் ஆடும் 2 மாத காலம் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பது சோர்வைத் தரும் என்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் இன்று தெரிவித்தார்.

தனது முடிவை பிசிசிஐ மற்றும் சன்ரைசர்ஸ் அணியிடம் தெரிவித்துவிட்டார் மிட்செல் மார்ஷ். 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரூ.2 கோடிக்கு மிட்செல் மார்ஷை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அந்த சீசன் முழுவதுமே அவர் ஆடவில்லை. இந்நிலையில், இந்த சீசனிலிருந்தும் விலகியுள்ளார்.

இதையடுத்து அவர் விலகிய அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மாற்று வீரரை அறிவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராயை மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. 

இங்கிலாந்து அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவரும் ஜேசன் ராய், ஐபிஎல்லில் 2017 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் 2018ல் டெல்லி அணிக்காகவும் ஆடினார். அந்த 2 சீசனிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 8 போட்டிகளில் தான் ஆடினார் ஜேசன் ராய்.

அதன்பின்னர் ஐபிஎல்லில் விலைபோகாத ஜேசன் ராயை, இப்போது மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios