இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 3வது டி20 போட்டியில் ஆடுகிறது இந்திய அணி. இந்த போட்டியில் ஜெயித்தால் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை ஜெயித்துவிடும்.
முதலிரண்டு டி20 போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பவுலிங் சுமாராகவே இருந்ததால் இந்த போட்டிக்கான அணியின் பவுலிங் காம்பினேஷனில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. உம்ரான் மாலிக் - அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த போட்டிகளில் ஆடிய அதே அணி மீது நம்பிக்கை வைத்து, அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல்படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ட்வைன் பிரிட்டோரியஸ், ராசி வாண்டர் டசன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வைன் பார்னெல், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, அன்ரிக் நோர்க்யா.
