முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா லீவு, ஏன் தெரியுமா? மச்சினன் கல்யாண ஃபங்ஷன்!
மனைவி ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேயின் திருமண நிகழ்ச்சி காரணமாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஓய்வு எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் போட்டி வரும் 17 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் அதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஹர்திக் இதை செய்தால் ரோகித்துக்கு பதிலாக அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் - சுனில் கவாஸ்கர்!
ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தே திருமணம்:
ரோகித் சர்மாவின் மனைவியான ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேவி திருமண நிகழ்ச்சி காரணமாக அவர் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 9 ஆம் தேதி 13 ஆம் தேதியோடு டிராவில் முடிந்த நிலையில், மைத்துனனின் திருமண ஏற்பாடுகளில் ரோகித் சர்மா கொஞ்சம பிஸியாகிவிட்டார். இன்று (15 ஆம் தேதி) குணால் சஜ்தேவியின் சங்கீத மற்றும் ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் வைபவம் நடந்துள்ளது. இதில், ரோகித் சர்மா மற்றும் ரித்திகா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!
யார் இந்த குணால் சஜ்தே?
இவர், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள டெலாய்ட்டின் ஸ்போர்ட்ஸ் பிசினஸ் குரூப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன், நெக்ஸஸ் கன்சல்டிங் குரூப் - ரோட்மேன் உடன் பணிபுரிந்துள்ளார். குணால் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பையின் ஹெச்ஆர் காமர்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
6ஆவது போட்டியில் முதல் வெற்றியோடு திரும்பி வந்த ஆர்சிபி: ஸ்மிருதி மந்தனா ஹேப்பி ஃபீலிங்!
ஹர்திக் பாண்டியா கேப்டன்:
குணால் சஜ்தேவியின் திருமண நிகழ்ச்சி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையடுத்து, ரோகித் சர்மா 2ஆவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்பார். இந்தப் போட்டி வரும் 19 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய் எஸ் ஆர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. ரோகித் சர்மாவுக்குப் பதிலாக முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டால் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கு முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு உண்டு.