#CSKvsDC குரு - சிஷ்யன் மோதல் குறித்த ரவி சாஸ்திரியின் டுவீட்..! செம வைரல்
சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் டுவீட் செம வைரலாகிவருகிறது.
ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று மும்பையில், சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கிறது.
காயம் காரணமாக டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் ஆடாததால், ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படவுள்ளார். ரிஷப் பண்ட்டின் தலைமையில் டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் ஆடுகிறது.
இந்திய அணியில் தோனியின் இடத்தைத்தான் ரிஷப் பண்ட் நிரப்பியுள்ளார். அந்தவகையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
குரு மற்றும் சிஷ்யன் கேப்டன்சியிலான அணிகள் இன்று மோதுவது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ள டுவீட் செம வைரலாகிவருகிறது.
“குரு vs சீடன். இந்த போட்டி செம வேடிக்கையாக இருக்கும். ஸ்டம்ப் மைக்கை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்? என்று சாஸ்திரி பதிவிட்டுள்ளார். அந்த டுவீட் செம வைரலாகிவருகிறது.